'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தொலைக்காட்சிகளில் அதிகமாக ஔிப்பரப்பட்ட ஒரு விளம்பரம் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய கடை திறப்பு விழா பற்றிய விளம்பரம் தான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு ஸ்டார் நாகர்ஜூனா, கன்னட ஸ்டார் சிவராஜ்குமார், தமிழ் ஸ்டார் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, மலையாள ஸ்டார் மஞ்சு வாரியர் மற்றும் ஆல் இந்தியா ஸ்டார் ஐஸ்வர்யா ராய், ஆகியோர் விளம்பரங்களில் தோன்றி அசத்தினார்.
இந்த புதிய கடை திறப்பு விழா சென்னை, தி.நகரில் இன்று சிறப்பாக நடந்தது. இந்த திறப்பு விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியர், நாகர்ஜூனா, சிவராஜ் குமார், பிரபு, விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். விளம்பரத்தில் தோன்றியது போன்று நடிகர்கள் எல்லோரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர். நடிகை மஞ்சு வாரியர் பட்டு புடவையிலும், ஐஸ்வர்யா சுடிதாரிலும் வந்திருந்தார்.
ஏற்கனவே தி.நகர் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், ஒரு திரைநட்சத்திரம் அந்த ஏரியாவிற்கு வந்தாலே மக்கள் கூடி விடுவார்கள், அப்படியிருக்கையில் 7 திரைநட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தால் என்னாகும்...? இந்த ஸ்டார்களை எல்லாம் காண மக்கள் கூடி விட்டனர். குறிப்பாக அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சத்திரங்களை காண நகைக்கடை அமைந்துள்ள தி.நகர் சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூடிவிட்டது. மதுரையில் சித்திரை திருவிழாவை காண ஒரு கூட்டம் வருமே அதுபோன்று இருந்தது திநகர் பகுதி முழுவதும்.
திறப்பு விழா வந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றாக ரசிகர்களை பார்த்து கையசைத்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் பிரபு பேசுகையில், இப்படியொரு வரவேற்பை நான் எங்கும் பார்த்ததில்லை. இப்படியொரு வரவேற்பு கொடுத்த உங்களுக்கு எங்களது நன்றிகள். ஐஸ்வர்யா எங்கள் வீட்டு மருமகள். ஏனென்றால் அமிதாப் பச்சன், சிவாஜியை அண்ணன் என்று தான் அழைப்பார். அந்தவகையில் அவர் எங்கள் வீட்டு மருமகள். உங்களது அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி என்றார்.
ஐஸ்வர்யா ராய் பேசுகையில், எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் சென்னையும் ஒன்று. இன்று உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரித்திர நாள். இவ்வளவு பெரிய நகைகடை திறக்கப்பட்டுள்ளது, அனைவரும் இங்கு வந்து நகை வாங்கி செல்லுங்கள் என்றார்.
மஞ்சுவாரியர் பேசும்போது, இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மேலும் ஒரு சரித்திர நாள் என்று சொல்லலாம். அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, சிவராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களுடன் நான் நடித்ததை என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அமிதாப் பேசும்போது, வணக்கம் சென்னை. நான் இங்கு நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. சுமார் 40 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். சிவாஜி, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றி உள்ளேன். இப்படியொரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு நன்றி என்றவர், வேஷட்டி சட்டையில் நான் எப்படி இருக்கிறேன் என்று ரசிகர்களை பார்த்து கேட்டார், மேலும் இப்போது நானாகவே வேஷ்டி கட்ட கற்று கொண்டேன் என்று கூறினார்.