‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த 80களில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை, கிராமத்துப் பக்கங்களில் அதிகமாகவே வளர்த்துக் கொண்டவர் விஜயகாந்த். அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் ரஜினிகாந்தை விட விஜயகாந்துக்குத்தான் ரசிகர் மன்றங்கள் அதிகமிருக்கும். பல வெள்ளி விழா படங்களையும், வெற்றிப் படங்களையும் கொடுத்த விஜயகாந்த் தற்போது அரசியலில் பிஸியாகிவிட்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார்.
இருந்தாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை நாயகனாக அறிமுகப்படுத்தி 'சகாப்தம்' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். மிகவும் பிரம்மாண்டமான பூஜை, இசை வெளியீடு என்று எல்லாம் நடத்தினாலும் படத்தை வெளியிட்ட பிறகும் சத்தமேயில்லாமல் போய்விட்டது. ஒரு ஆக்ஷன் நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்த விஜயகாந்த் அவருடைய மகனை இப்படி அறிமுகப்படுத்தி விட்டாரா என அவரது ரசிகர்களே வருந்தும் அளவிற்கு ஒரு மோசமான படத்தைத் தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.
சினிமாவில் பெரிய பின்னணி இல்லாதவர்களே சரியான படங்களையும், கதைகளையும், இயக்குனர்களையும் தேர்வு செய்து வெற்றி பெறும் போது திரையுலகத்தில் இத்தனை அனுபவம் மிக்க விஜயகாந்த், மகன் சண்முகப்பாண்டியனை அறிமுகப்படுத்திய விதத்தில் 'கோட்டை' விட்டுவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே விமர்சிக்கிறார்களாம்.