இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆண்ட்ரியா தனி நாயகியாக நடித்த முதல் படமான 'வலியவன்' படம் அவரை நன்றாக ஏமாற்றிவிட்டது. 'எங்கேயும் எப்போதும்' போன்ற படத்தைக் கொடுத்த இயக்குனர் சரவணனை நம்பி அவர் இந்தப் படத்தை நடிக்க சம்மதித்துள்ளார். அதோடு, முதன் முறையாக ஒரு படத்தில் தனி நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும் 'வலியவன்' படத்தில் நடிக்க சம்மதித்தேன் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளிவந்து சில நாட்களிலேயே 'பார்சல்' ஆகிவிட்டது.
ஆண்ட்ரியா அறிமுகமான 'பச்சைக் கிளி முத்துச்சரம்' படத்தில் ஜோதிகாவுடனும், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ரீமா சென்னுடனும், 'மங்காத்தா' படத்தில் த்ரிஷா, அஞ்சலியுடனும், 'விஸ்வரூபம்' படத்தில் பூஜா குமாருடனும், 'என்றென்றும் புன்னகை' படத்தில் த்ரிஷாவுடனும், 'அரண்மனை' படத்தில் ஹன்சிகா, லட்சுமிராயுடனும் என 'வலியவன்' படத்திற்கு முன் வரை இரண்டு, மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா ஆவலுடன் எதிர்பார்த்த அவருடைய முதல் தனி கதாநாயகிப் படமான 'வலியவன்' அவருக்கு மறக்க முடியாத வலியைக் கொடுத்து விட்டது.