கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
தன் இளைய மகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக அறிமுகப்படுத்த எண்ணியபோது விஜயகாந்த், பல பேரிடம் கதை கேட்டார். புதுமுக இயக்குநர்கள் தொடங்கி, பிரபல இயக்குநர்கள்வரை பலரிடம் கதை கேட்ட விஜயகாந்த் கடைசியில் நவீன் என்பவர் சொன்ன கதையை ஓகே பண்ணினார். அந்தக் கதையைச் சொன்ன நவீன், உச்சகட்டம், நெல்லை சந்திப்பு என இரண்டு படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்களும் இன்னும் வெளிவரவில்லை. அதனாலோ என்னவோ... சகாப்தம் படத்தை இயக்கும்படி கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டார் விஜயகாந்த்.
அவர் மறுத்துவிட்டதால் வல்லரசு மகாராஜனிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ்குமார் ராஜன் என்ற புதுமுக இயக்குநரை வைத்து சகாப்தம் படத்துக்கு பூஜை போட்டார். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் விஜயகாந்தே டைரக்டராக மாறி ஸ்டார்ட் கட் சொல்ல, கடுப்பான சந்தோஷ்குமார் ராஜன் சொல்லாமன் கொள்ளாமல் நடையைக்கட்டினார். அதன் பிறகு சுரேந்திரன் என்பவரை இயக்குநராக்கி சகாப்தம் படப்பிடிப்பை தொடர்ந்தனர். இயக்குநர் மாறிய பிறகும் டைரக்டர் வேலையில் விஜயகாந்த் தலையிடுவது மாறவில்லை. அவரே டைரக்டராகி முழுப்படத்தையும் எடுத்தார். சகாப்தம் படம் ரிலீஸ் ஆகி... தற்போது ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது. தன்னை பெயரளவுக்கு டைரக்டராக வைத்துவிட்டு விஜயகாந்த் டைரக்ட் பண்ணியதுதான் தோல்விக்குக் காரணம் என்ற உண்மையை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறார் இயக்குநர் சுரேந்திரன்.