‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திமிரு, காளை போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கிய தருண் கோபி, படம் இயக்குவதை சிறிது காலம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், இப்போது மீண்டும் டைரக்ஷ்னுக்கே வந்துவிட்டார். புதுமுகம் ஸ்ரீமதி என்பவர் ஹீரோயினாக நடிக்க இவரே ஹீரோ வேடம் ஏற்று, இயக்கவும் செய்துள்ளார். வெறி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை தொடர்ந்து 76 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார். சென்னை, மதுரை, உசிலம்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
ஆக்ஷ்ன், காதல், சென்டிமென்ட் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இப்படத்தில் இருக்கும் என்றும், சொல்லப்போனால் திமிரு படத்தின் பார்ட்-2 வாக கூட தோன்றும் என்கிறார் தருண் கோபி. அதோடு இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு வெறி படம் இருக்கும் என்றும், படத்தின் ஹைலைட்டாக டி.ஆர்., சரத்குமார், ஆண்ட்ரியா, டி.கே.கலா ஆகியோர் ஒரு பாடல்களை பாடியிருப்பதாகவும், மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தருண் கோபி கூறினார்.