சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
ஒரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து வந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் தனி காமெடியனாக உயர்ந்தார். அதோடு, முன்னணி ஹீரோக்களே அவரது கால்சீட்டுக்காக காத்திருந்து நடிக்கும் அளவுக்கு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வியாபாரம் ஆகிவந்தது. ஆனால், அரசியல் புயலில் சிக்கிய பிறகு வடிவேலுவின் மார்க்கெட் டோட்டலாக சரிந்து விட்டது. ஆனபோதும், தெனாலிராமன் மூலம் மறுபிரவேசம் செய்த வடிவேலு, தற்போது எலி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த படத்தில் தனது நடிப்பின் சாயல் ஏற்கனவே நடித்ததுபோல் இருக்கக்கூடாது என்பதற்காக பழைய காமெடி கூட்டாளிகளில் கிங்காங்கை தவிர யாரையுமே அவர் அழைக்கவில்லை. முற்றிலும் புதிய காமெடியன்களுடன் நடித்து வருகிறார்.
இருப்பினும், அவருடன் தொடர்ந்து நடித்து வந்த சில காமெடியன்கள் அடுத்தபடியாக தங்களை யாருமே நடிக்க அழைக்காதால் வேறு வழியில்லாமல், மீண்டும் வடிவேலுவை சந்தித்து சான்ஸ் தருமாறு வீடு தேடி சென்று கேட்டார்களாம். ஆனால், அவரோ, முன்பு நான் காமெடியன் வடிவேலுவாக இருந்தேன். அதனால் நீங்கள் எனக்கு தேவைப்பட்டீர்கள். ஆனால் இப்போது ஹீரோ வடிவேலுவாகி விட்டேன். அதனால் நீங்கள் எனக்கு தேவையில்லை. அதோடு, மீண்டும் உங்களுடன் இணைந்து நான் நடித்தால் ஹீரோவாக தெரியமாட்டேன். பழைய காமெடியனாகவே தெரிவேன். அதனால் எனது ஹீரோ இமேஜ்க்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி அவர்களை துரத்தியடித்து விட்டாராம்.