தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க இருந்தார் சிபிராஜ். மீண்டும் அதே நாய் கிடைப்பதில் சில பிரச்னைகள் இருந்ததால் அதனை ஒத்திவைத்து விட்டு தற்போது ஜாக்சன்துரை என்ற படத்தை துவக்கி வைத்துவிட்டார். இந்தப் படத்தை தயாரிப்பது ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் எம்.எஸ்.சரவணன். இவர் ஏற்கெனவே மாசானி, சலீம் படங்களை தயாரித்தவர். சென்னை செங்கற்பட்டு பகுதி விநியோகஸ்தராக இருப்பவர்.
பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சிபிராஜுடன், அவரது தந்தை சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கருணாகரன் காமெடி செய்வதுடன் குணசித்திர கேரக்டரிலும் நடிக்கிறார். விபின் சித்தார்த் இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.
"வீரபாண்டிய கட்டபொம்மன் சரித்திரத்தில் வரும் ஜாக்சன் துரை அடிப்படையில் ஒரு கோழை. ஆனால் வீரன் போல் தன்னை காட்டிக் கொள்வார். அப்படிப்பட்ட ஹீரோவாக சிபிராஜ் நடிக்கிறார். அதுதான் படத்தின் டைட்டில். 100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டு ஒரு ஊர் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறது. அதை துரத்த செல்கிறார் போலீஸ் அதிகாரி சிபிராஜ். அந்த துரத்தல் நடவடிக்கையில் நடக்கும் கலாட்டாக்கள்தான் திரைக்கதை" என்கிறார் இயக்குனர் தரணிதரன்.