10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
தொழிலதிபர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், சென்னை 28 படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தம்பி வினோத்குமார் தயாரிப்பில், ராஜபாண்டி இயக்கத்தில் நடித்த ''என்னமோ நடக்குது'' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால். தற்போது மீண்டும் அதே டீம் அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறது.
இதற்கு ''சிகண்டி'' என்று முதலில் பெயர் வைத்தார்கள். தற்போது ''அச்சமின்றி'' என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கே ஹீரோயின். பிரேம்ஜி இசை அமைக்கிறார். கல்வி தொடர்பான படம். உயர்கல்வியில் நடக்கும் கொள்ளைகள், முறைகேடுகள், கல்வி தந்தைகள் உருவாகும் விதம் பற்றி படம் பேசப்போகிறது.
சென்னையில் நேற்று (மார்ச் 9) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 20 நாட்கள் நடக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.