கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் 'நிமிர்ந்து நில்'. சில பல தடைகளைக் கடந்துதான் இந்தப் படம் தமிழில் வெளியானது. மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தாமதமாக 8ம் தேதிதான் வெளியானது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அது குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் ஒரு நாள் தாமதமாக வெளியானால் கூட, அது ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெறாது என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உண்டு. அது இந்தப் படத்திற்கும் நடந்தது.
தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு அப்போதே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப் படம் அப்போது வெளியாகவில்லை. தொடர்ந்து சில தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னரும் அந்தப் படம் வெளியாகாமலே போனது. தற்போது மார்ச் மாதம் 27ம் தேதியன்று யுகாதி தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். நானி, அமலா பால் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நானி நடித்து இதற்கு முன் வெளிவந்த சில தெலுங்குப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படம் வெளியாகும் போதும் நானியின் மற்றொரு தெலுங்குப் படமான 'எவனே சுப்பிரமணியம்' படமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.