'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யுடிவியின் தென்மண்டல அதிகாரியாக இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன், ப்ளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமியை துவக்கி உள்ளார். இதன் துவக்க விழா நேற்று (மார்ச் 4) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இயக்குனர் மகேந்திரன், கே.பாக்யராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஒரு ஆண்டு பயிற்சி வகுப்புகளை கொண்ட இந்த அகாடமியின் வகுப்புகள் ஜூலை மாதம் முதல் துவங்குகிறது.
இதில் இயக்குனர் பயிற்சியின் துறைத் தலைவராக இயக்குனர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திரைக்கதை அமைப்பின் துறை தலைவராக கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு கீழ் பார்த்திபன், ஞானராஜசேகரன், கே.ராஷேஸ்வர், சசி, வெங்கட்பிரபு, விஷணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.எஸ்.பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ், வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன் ஆகியோர் பேராசியர்களாக பணியாற்றுகிறார்கள்.
ஒளிப்பதிவு பயிற்சி துறை தலைவராக ஒளிப்பதிவாளர் மது அம்பாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ், பி.கண்ணன், மகேஷ் முத்துசாமி, சி.ஜே.ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நடிப்பு துறை தலைவராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் ஷண்முகராஜன், சந்திர மோகன், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ரோகிணி பணியாற்றுகிறார்கள். எடிட்டிங் பிரிவுக்கு பி.லெனினும், திரைப்பட இதழியல் துறைக்கு கார்டூனிஸ்ட் மதனும் துறை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தயாரிப்பு பிரிவு துறைத் தலைவராக கோ.தனஞ்செயன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சின்னத்திரை பிரிவு தலைவராக குட்டி பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.