ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபு தேவா இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் என கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால், அப்படி எந்த ஒரு படமும் தயாராகப் போவதில்லையாம். அது ஒரு வெறும் வதந்திதான் என கமல்ஹாசனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தற்போது அவர் நடிப்பில் வெளிவர உள்ள 'உத்தம வில்லன், பாபநாசம்' ஆகிய இரண்டு படங்களிலும், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வரூபம் 2' படத்திலும்தான் கவனத்தை வைத்திருக்கிறாராம். அடுத்தடுத்து வெளிவர உள்ள இந்த படங்களை வெற்றிப் படங்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாம்.
இதனிடையே கமல்ஹாசன், 'பீகே' படத்தின் ரீமேக்கில் நடிப்பதாகவும், பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் வெளிவரும் செய்திகளில் துளி கூட உண்மையில்லையாம். மேலே சொன்ன மூன்று படங்களின் வெளியீட்டிற்குப் பிறகுதான் அவர் அடுத்த படத்தில் கவனம் செலுத்தவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஒரு வேளை அதற்குள்ளாக நல்ல இயக்குனர், நல்ல கதை கிடைத்தால் வேறு ஏதாவது படம் பற்றி யோசிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்க இப்போதும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. எந்த ஒரு புதிய படத்தை கமல்ஹாசன் இப்போது ஆரம்பித்தாலும் அது கண்டிப்பாக 2016ம் ஆண்டுதான் வெளிவரும். சமீபத்தில் கமல்ஹாசன் சில வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். அது அவர் இயக்கப் போகும புதிய படத்திற்கா அல்லது 'மருதநாயகம்' படத்திற்கா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன் 'மருதநாயகம்' படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாகவும், அதற்கு வெளிநாட்டு இந்தியர் ஒருவர் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஒரு வேளை கமல்ஹாசனின் அடுத்த படைப்பாக 'மருதநாயகம்' இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்.