இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமல், பல ஆண்டுகளாக ஒரு பாலிசியை பின்பற்றி வந்தார். 'ஒரு படத்தில் நடித்து முடித்த பின் தான் அடுத்த படம்' என்ற பாலிசி தான் அது. ஆனால், 'விஸ்வரூபம்' படத்துக்கு பின், அந்த பாலிசியை மாற்றி விட்டார். 'விஸ்வரூபம் - 2, பாபநாசம், உத்தம வில்லன்' என, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்தார். இது, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கோலிவுட்டுக்குமே ஆச்சரிய அதிசயமாகத் தான் இருந்தது. இந்த மூன்று படங்களில் தற்போது, 'உத்தம வில்லன்' தான் முதலில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழா மேடையில் இருந்தபடி கமல், இசை தகட்டை வெளியிட, அதை, மும்பையில் இருந்த ஸ்ருதி, 'பேஸ்டைம்' தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.