'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பீதி தொற்றி கொண்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுக்க பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி செல்கின்றனர். பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டிலும் பன்றிக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவும், ஜெயம் ரவியும், ''அப்பாடக்கர்'' படப்பிடிப்பில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருந்த போட்டோவை சமூக வலைதளங்களில் வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ளார். இதனால் ஒருவேளை த்ரிஷாவுக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் த்ரிஷாவோ, தனக்கு பன்றிக்காய்ச்சல் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊசி போட்டு கொண்டதாக தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.