டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.. ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோதே அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள்.. அதன்பின் 'த்ரிஷ்யம்' ஹிட் மூலமாக உலக நாயகன் கமலை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் கூட, ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி திலீப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப்படத்தில் ஜோஸுட்டி என்கிற மனிதனின் முப்பது வருட வாழ்க்கையைத்தான் கதையாக மாற்றியிருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, பின்னாளில் நியூசிலாந்துக்கு பயணமாகும் அளவுக்கு டெவலப் ஆகிறார் திலீப். ஆனால் அங்கே வெவ்வேறு சூழலில் இன்னும் இரண்டு பெண்கள் அவரது வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள். அது அவரது வாழ்க்கை பயணத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஜோதி கிருஷ்ணா மற்றும் ரக்சனா நாராயணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை..