ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் 35 கோடி நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லி விநியோகஸ்தர்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படத்தை வாங்கி விற்று லாபம் பார்த்த ஈராஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமோ கூலாக தன் வியாபாரத்தை கவனித்து வருகிறது. உத்தமவில்லன், ரஜினி முருகன் ஆகிய படங்களை வாங்கிய ஈராஸ் அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தை வாங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மாஸ் படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா ஜோடியாக நடிக்கின்றனர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வியாபார விஷயங்களும் தற்போது சூடு பிடித்துள்ளது.
அதன் படி 'மாஸ்' படத்தின் உலகாளவிய விநியோக உரிமையை 'ஈராஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த வியாபாரத்தை முன்னின்று நடத்தியவர் ரஜினியின் மகளும், ஈராஸ் சௌத் நிறுவனத்தின் அதிகாரியுமான சௌந்தர்யா ரஜினிகாந்த். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான 'மாற்றான்' படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வாங்கி உலகம் முழுக்க விநியோகம் செய்தது. அந்தப் படத்தின் படு தோல்வி காரணமாக பல கோடிகளை இழந்தது ஈராஸ். இந்நிலையில், மீண்டும் சூர்யா நடித்த படத்தை ஈராஸ் வாங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மாற்றான் நஷ்டத்துக்கு ஈடாகவே மாஸ் படத்தை குறைந்தவிலைக்கு ஈராஸ் வாங்கி உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.