ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்துககு இசையமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். அதையடுத்து மீண்டும் விஜயசேதுபதி நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் உள்குத்து, மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் படம் என தமிழில் சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், மலையாளத்தில் நிவின் பாலி, இஷாதல்வார் நடிப்பில் வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கிய வினீத் ஸ்ரீனிவாசன் தற்போது தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க ஒபபந்தமாகியிருக்கிறார் ஜஸ்டின். அப்படம் பற்றி அவர் கூறுகையில், தமிழில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை. அதோடு, அங்குள்ளவர்கள் சாப்ட்டான இசையைத்தான் கேட்பார்கள். நானும் மெலோடி இசையில் அதிக ஈடுபாடு கொண்டவன் என்பதால், அந்த படத்துக்கு என்னிடமிருந்து வித்தியாசமான இசையை வெளிபபடுததிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.
மேலும், தமிழில் இதுவரை தான் இசையமைத்த படங்களில் மெலோடியான பாடல்களையே கொடுத்திருந்தபோதும், இப்போது உள்குத்து படத்தில் ஒரு அதிரடியான குததுப்பாடலை கம்போஸ் செய்திருப்பதாக சொல்லும் ஜஸடின் பிரபாகரன், அதன்பிறகு கமிட்டாகியிருக்கும் படங்களிலும் குததுப்பாட்டுக்கு இசையமைப்பதாக சொல்கிறார். அதோடு, குத்துப்பாடலைப் பொறுத்தவரை டியூன் மட்டுமின்றி, பாடலின் வார்ததைகளும் முக்கியம். கேட்சிங்காக இருந்தால்தான் ஹிட்டாகும் என்பதால், பாடலாசிரியர்களிடம் வித்தியாசமான வார்த்தைகளை போட்டு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறாராம் ஜஸ்டின்.