டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்ததோடு, முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார் பிருத்விராஜ். தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும் தன்னுடைய தனி முத்திரையை பிருத்விராஜ் பதிக்கத்தவறியதே இல்லை. கடைசியாக பிருத்விராஜ் நடித்த தமிழ்ப்படம் காவியத்தலைவன். அந்தப் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். காவியத்தலைவன் வெற்றியடைந்தால் தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அப்படம் தோல்வியடைந்த காரணத்தினால் தன் கவனத்தை மலையாளப்பக்கமே மீண்டும் திருப்பிவிட்டார்.
அங்கே படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் பிருத்விராஜ் தற்போது அனார்கலி என்ற படத்தில் நடிக்கிறார். சச்சி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஆழ் கடல் டைவிங் பயிற்சியாளராக நடிக்க உள்ள பிருத்விராஜ், இதற்காக தற்போது சிறப்புப் பயிற்சி எடுத்து வருகிறார்! இந்த படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவு பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக மியா, பாயல் கோஷ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான் ராஜீவ் மேனன் மற்றும் பாலிவுட் நடிகர் கபீர் பேடி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.