ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் தான் சிபி மலயில்.. அதற்காக 1950களை சேர்ந்தவரோ என நினைத்துவிட வேண்டாம்.. மோகன்லால், மம்முட்டியின் சம காலத்தவர் தான். அவர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான்.. கடந்த வருடம் இவரது இயக்கத்தில் ஜெயராம் நடித்த 'ஞங்களுடைய வீட்டில் அதிதிகள்' படம் வெளியானது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து சிபிமலயில்-ஜெயராம் கூட்டணி அமைந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தப்படத்திற்கு இருந்தது. ஆனால் படம் ஓரளவுக்கு சுமாராகவே போனது..
இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த இயக்குனர் சிபிமலயில் படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இணையதளங்களில் படத்தை பற்றி எழுதப்படும் மோசமான விமர்சனங்கள் தான் என கூறியுள்ளார்.. குறிப்பாக டெக்னிகல் விஷயங்களை கூட ரொம்ப தெரிந்தவர்கள் மாதிரி விமர்சிக்கிறார்கள்.. அவைதான் படத்தை பார்க்கும் ஆவல் இருப்பவர்களையும் தியேட்டர்களுக்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறது. சொல்லப்போனால் ஆன்லைன் விமர்சனங்கள் தான் மலையாள சினிமாவின் வில்லன்” என்றும் கொந்தளித்துள்ளார்