ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோடம்பாக்கம் சினிமாவில் குறிப்பிடக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிறகு திரைக்கு வரும். அந்த வகையில் தானே இசையமைத்து நடித்து இயக்கி உள்ள படம் இசை. இப்படம் 30.01.2015 அன்று திரைக்கு வர ரெடியாக இருந்தது. படத்துக்கான விளம்பரங்களும் படு விமரிசையாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் வழக்கம் போல இசை படத்துக்கும் சிக்கல் வந்து படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் அப்செட்டாகி இருப்பது சூர்யா தரப்பு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்களும் தான் என்ன பிரச்சனை என்றால், கியூப் முறையில் படம் உருவாகி உள்ளது. அதனால் கியூப்க்கு கட்ட வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தை சூர்யா தரப்பு தரவில்லையாம். இதனால் கியூப்காரார்கள் பணத்தை கட்டிவிட்டு படத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கறாராக கூறிவிட்டனர். இதனால் இசை திரைக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்செய்தி கேட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.