நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பத்து படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. பத்தாவது படம் தான் ஆர்யா, பிருத்விராஜ், இந்திரஜித் கூட்டணியில் உருவாகி வரும் 'டபுள் பேரல்'.
ஆனால் பதினொன்றாவது முறையாக இருவரும் 'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.. மூன்றாவது ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார். 'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் நடிகர் நாதிர்ஷா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.. கதாநாயாகியாக வேதிகா நடிக்க இருக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.