விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
புதிய தொழில்நுட்ப கலைஞர்கள், புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்து மேல்நாட்டு மருமகள் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். ஸ்கை மூவீஸ் சார்பில் எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். ராஜ்கமல், ஆண்ட்ரீயன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா கேமரா மேனாகவும், கிஷோர் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். எம்.எஸ்.எஸ். இயக்குகிறார்.
"வெளிநாட்டு மோகம் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வாழ்கிறவர்களுக்குத்தான் நம் நாட்டின் அருமை புரியும். பணத்துக்காக வெளிநாடு செல்பவர்கள் என்னதான் வசதியாக வாழ்ந்தாலும் நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடு, உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. அப்படி வெளிநாடு சென்ற ஒருவன் எதையெல்லாம் இழக்கிறான். எதையெல்லாம் பெறுகிறான் என்கிற கதை. படத்தில் பணியாற்றும் அனைவரும் புதுமுங்கள்" என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.