மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நடிகை விந்தியா தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை யோகானந்த் மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந் அவர் இன்னும் மீளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தந்தையின் விருப்பப்படி அவரது அஸ்தியை வாரணாசி சென்று கங்கையில் கரைத்துவிட்டுத் திரும்பினார்.
அன்று முதல் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன 27) அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது கணயம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பயனாக அவர் அபாய கட்டத்தை தாண்டினார். இன்று (ஜன 29) சாதாரண நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.