ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக கருதப்படும் பாகுபலி படத்தின் படப்படிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது அது நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ் நடிக்கிறார்கள். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், கீரவாணி (மரகதமணி) இசை அமைக்கிறார்.
தற்போது படத்தின் வசனகாட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கபட வேண்டியது இருக்கிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தெலுங்கு, தமிழில் டப்பிங் பணிகள் முடிந்து விட்டது. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் கீரவாணி 24 மணிநேரமும் படத்துக்கு பின்னணி இசை சேர்த்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 6 விஎப்எக்ஸ் ஸ்டூடியோக்கள் மற்றும் ஹாங்காங், அமெரிக்காவில் உள்ள ஸ்டூடியோக்களில் விசுவல் எபெக்ஸ்ட் பணிகள் நடக்கிறது. தேசிய விருது பெற்ற பி.எம்.சதீஷ் சவுண்ட் டிசைனராகவும், தெபஜிதி சால்மாஸ் சவுண்ட் மிக்சராகவும் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் டிஐ பணிகள் அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிடப்பட இருக்கிறது.