ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி நடிக்கும் பொங்கி எழு மனோகரா படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகிறது. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கும் இர்பானுக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கூறியதாவது:
ஒரு பால்கார இளைஞனுக்கு வரும் இரண்டு காதல்கள்தான் கதை. பால்காரனாக இர்பான் நடிக்கிறார், அவரது காதலிகளாக அர்ச்சனாவும், அருந்ததி நாயரும் நடிக்கிறார்கள். 1990களில் நடக்கும் கதை. இதனால் அந்த சாயலில் உள்ள ஒரு கிராமத்தை தேடிச் சென்று படமாக்கி இருக்கிறோம்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் இர்பானை மாடுகளிடம் பால் கறக்கச் சொல்லி பயற்சி கொடுத்தோம். நிஜத்தில் பணக்காரவீட்டு பையனான இர்பான் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார். அப்படி இருந்தும் படப்பிடிப்பில் பால்கறக்கும் காட்சியில் மாட்டிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ரமேஷ் ரங்கசாமி.