விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
திரைப்பட நட்சத்திரங்கள் என்றாலே சினிமாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை சமந்தா. சற்று முன் அவர் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து ஒரு டிவீட் செய்துள்ளார். இதற்கு முன்னும் சமந்தா பல சமயங்களில் அவருடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னதுண்டு.
“அனைத்து மக்களுக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமையும் உண்டாகட்டும். இந்தியராக இருக்கப் பெருமை. அதிபர் ஒபாமா இங்கே வந்திருப்பது அரசியலுக்கு மிகச் சிறந்த விஷயமாகும். வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகவும் திகழ்கிறது. மோடியைப் புகழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தக் கருத்து விமர்சிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், தான் சொல்ல நினைப்பதை, தன்னுடைய கருத்தை வெளிப்படையாகச் சொல்லி வருபவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட்டு விலகிய பின் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவாரோ....?