ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹரி இயக்கிய சிங்கம்-2 படத்தில் நடித்த சூர்யா, அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க இருந்தார். அலுவலக பூஜைகூட போடப்பட்டது. ஆனால, கெளதம் சொன்ன கதை அவருக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்த வெளியேறி, லிங்குசாமி சொன்ன அஞ்சான் கதையில் நடித்தார் சூர்யா.
அந்த படம் தொடங்கியதில் இருந்தே மிகப்பெரிய பப்ளிசிட்டிகளை முடுக்கி விடப்பட்டு படப்பிடிப்பை நகர்த்தி வந்தார் லிங்குசாமி. அதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதையடுத்து படம் வெளியானபோது, படம் முழுக்க அவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திக்கொண்டேயிருந்ததால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்திலும் போலீசாக நடித்துள்ள அஜீத், துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக விரோதிகளை சுட்டுத்தள்ளும் காட்சிகள்தான் அதிகமாக உள்ளதாம். என்றபோதும், அஞ்சான் படம் போன்று ஆகி விடக்கூடாது என்பதற்காக, கதையில் திருப்பங்களை அதிகமாக வைத்திருக்கும் கெளதம்மேனன், ஓரிரு சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து விட்டு, காட்சிகளை பரபரப்பாக நகர்த்தியுள்ளாராம்.
மேலும், அஜீத்துடன் த்ரிஷா, அனுஷ்கா போன்ற நடிகைகள் இடம்பெறும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை இதுவரையில்லாத அளவுக்கு ஸ்டைலிஷாக படமாக்கியுள்ளாராம் கெளதம்மேனன்.