தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரதேசியைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் படம் தாரைதப்பட்டை. கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையை படமாக்கி வரும் பாலா, முன்னதாக சசிகுமார்-வரலட்சுமிக்கு கரகாட்ட பயிற்சி கொடுக்கவே பல மாதங்களை செலவு செய்தார். அதையடுத்து, இப்போது தஞ்சாவூரில் கடந்த 2 மாதங்களாக முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
அதோடு, கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பக்காவாக பதிவு செய்ய நினைக்கும் பாலா, படத்தில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகளையும் படம் முடிகிற வரை வேறு எநத படத்திலும் நடிக்க செல்லாத அளவுக்கு அக்ரிமென்ட் போட்டுள்ளாராம். காரணம், இந்த படத்தில் நடித்துககொண்டிருக்கும்போது வேறு படங்களில் நடித்தால் அவர்களை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்குள் கொண்டு வருவது கடினமாகி விடும் என்பதால், படப்பிடிப்பு முடிகிற வரைக்கும் அக்கம்பக்கம் கவனத்தை திருப்பக்கூடாது என்று முன்பே கண்டிசன் போட்டு விட்டாராம் பாலா.
மேலும். கடந்த இரண்டு மாதங்களாக தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடத்தி வருபவர், இன்னும் ஒரு மாதம அதே பகுதியில் படப்பிடிப்பு நடத்தி விட்டு, பின்னர் சில காட்சிகள் மற்றும் 2 பாடல்களுக்காக அந்தமானுக்கு செல்கிறாராம். அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடத்தி விட்டே சென்னை திரும்புகிறாராம். ஆக, இன்றைய தருவாயில் ஒரே படத்துக்காக 4 மாதங்கள் நடிகர் நடிகைகளை மொத்த குத்தகை எடுத்தவர் பாலாவாகத்தான் இருக்கக்கூடும்.