பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காமெடி கிங் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு வாய்மை படத்தில் காமெடி டாக்டராக நடிக்கிறார், 49ஓ என்ற படத்தில் ஹீரோவாக அதாவது இயற்கை விவசாயியாக நடிக்கிறார். அடுத்து அவர், ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதனை சுசீந்திரன் உதவியாளர் பாலமுருகன் இயக்குகிறார்.
இதுபற்றி பாலமுருகன் கூறியதாவது: கவுண்டமணி சாரிடம் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தார். காரணம் இது அவரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை உடனே ஷூட்டிங்க போகலாம் என்று கூறிவிட்டார். இதில் கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவன் வண்டி வாடகைக்கு விடுபவராக நடித்துள்ளார்.
ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையிருந்து மதுரைக்கு செல்கிறார். எல்லா விஷயத்தையும் அப்டேட்டாக வைத்திருக்கும் கவுண்டமணி வழியில் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடக்கிறது என்றார்.