ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிகிஷா பட்டேல் முக்கிய கேரக்டரில் நடிக்கும் படம் கரையோரம். கன்னட நடிகர் வசிஷ்டா ஹீரோ. கடற்கரையோரம் உள்ள ஒரு ரிசார்ட்சில் நடக்கும் மர்மமான சம்பவங்களை கொண்ட பேய் படம். இதில் இனியா பேயாக நடிக்கிறார். உடுப்பி அருகே உள்ள காயேப் கடற்கரையில் 40 லட்சம் ரூபாய் செலவில் ரிசார்ட் செட் போட்டு 30 நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜேகேஎஸ் கூறியதாவது: படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே படத்தில் இடம்பெற வேண்டிய கிராபிக்ஸ் பணிகளை முடித்து விட்டோம். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ற காட்சிகளை எப்படி எடுப்பது என்று முன்பே திட்டமிட்டுவிட்டோம். படத்தின் ஸ்டோரி போர்ட் பக்காவாக தயாராக இருந்தது. கன்னடம், மற்றும் தமிழ் வசனங்களின் பிரதி சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. நடித்த எல்லோருக்கும் கன்னடமும், தமிழும் பேசத் தெரியும் என்பதால் மளமளவென திட்டமிட்டபடி 30 நாளில் படப்பிடிப்பபை முடித்து விட்டோம். தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. என்றார்.