ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஜி நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது நட்பை புதுப்பித்து கொள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வர். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்பர். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் ஏற்றுக்கொண்டார்.
இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சியை நடிகை ராதிகா ஏற்று கொள்கிறார். ராதிகாவின், ரேடான் மீடியாஸ் சார்பில் ரேயான் ராதிகா முன்னின்று நடத்த இருக்கிறார். இந்தமுறை பெரிய விழாவாக கொண்டா இருக்கிறார்கள். அதில், இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரை கவுரவப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் பாலசந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது. அதேப்போன்று இயக்குநர் பாக்யராஜூம் பங்கேற்கவில்லை. தனது குருநாதர் பாரதிராஜா விருது பெறுவதால் அவரோடு சேர்ந்து நானும் விருது பெறுவது சரியாக இருக்காது என்று கருதுகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 24ம் தேதி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக்கிறது. விருது நிகழ்ச்சியோடு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறதாம்.