ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. 4 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் என்பதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டமான தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள்.
"அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றதாலும், 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ததாலும் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவாக இருந்தது. இப்போது பிக்அப் ஆகிவிட்டது. படத்தின் வசூல்பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று படத்தை வாங்கி விநியோகித்த வேந்தர் மூவீஸ் அறிவித்தது.
இதற்கிடையில் லிங்கா படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் நாளை (டிச 22) ராகேவந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியை சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நேற்று (டிச 20) போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.