இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, பொதுவாக அந்தப் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர் ஒரு படம்தான் இயக்குவார், முன்னணி ஹீரோவாக இருந்தால் அவரும் ஒரு படத்தில்தான் நடிப்பார். அந்தப் படத்தில் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அந்த மாபெரும் வெற்றிப் படம் அவர்களுக்கு மேலும் நான்கைந்து புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆனால், 'கத்தி' படத்தின் மாபெரும் வெற்றி அப்படத்தின் ஹீரோயினான சமந்தாவுக்கு மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. சமந்தா தற்போது நடித்து வரும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படம் எப்போதோ கமிட் ஆன படம்தான். உண்மையிலேயே சமந்தாவுக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வரவில்லையா, அல்லது அவர் ஏற்றுக் கொள்ளவில்லையா என்பது புதிராக உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் அழகான, கிளாமரான, தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்களுக்கு பஞ்சமாக உள்ளது. அப்படியிருக்க மேற்சொன்ன அனைத்துத் தகுதிகளும் உள்ள சென்னைப் பெண்ணான சமந்தாவிற்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை என்று சொன்னால் அது நம்பும்படியாக இல்லை. ஒரு வேளை அவர் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம், அல்லது பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் அடுத்து அவர் அஜித்துடனோ அல்லது விஷால், கார்த்தி போன்றோருடனோதான் நடிக்க வேண்டும். அந்த அறிவிப்புகள் அடுத்த ஆண்டு வரலாம், வராமலும் போகலாம்.