ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடித்த படங்களும் ஓடவில்லை...புதுப்படங்களும் வரவில்லை.... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கடந்த சில வருடங்களாக வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருந்தார் சிபிராஜ். தயாரிப்பாளர்கள் தன்னை நம்பி படம் எடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையை ஒரு கட்டத்தில் இழந்துவிட்ட சிபிராஜ் வேறு வழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கம் அளவுக்கு தள்ளப்பட்டார். நடிகர் சிபிராஜ் தயாரித்து நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம் சமீபத்தில் ரிலீசானது.
என்ன ஆச்சர்யம்... சிபி மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வகையில் நாய்கள் ஜாக்கிரதை படம் வர்த்தகரீதியில் வெற்றிப் பெற்றது. ரஜினியின் லிங்கா படம் வெளியான நிலையில் கூட இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் நாய்கள் ஜாக்கிரதை படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் படு உற்சாகமடைந்துள்ள சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம்.
சத்யராஜின் 'நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி” தயாரித்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தினை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய உரிமை கேட்டும் நிறைய பேர் சிபிராஜை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழக உரிமையை 70 லட்சத்துக்கு விற்றார் சிபி. படமோ 4 கோடி வசூல் செய்து படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு லாபம் கொடுத்தது. எனவே ரீமேக் ரைட்ஸை பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்க முடிவு செய்துள்ள சிபி கோடிக்கணக்கில் விலை சொல்கிறாராம். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றுள்ளதால் வேறு படங்களில் நடிக்கவும் சிபிராஜுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறதாம்!