ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும், தமிழக அரசை அணுகி, அரசாங்கத்திடமிருந்து லட்சக்கணக்கில் நிதி உதவியையும் பெற்று சர்வதேச திரைப்பட விழாவை நடத்தியது. இந்த ஆண்டு, 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் நிதி உதவியை வாங்க திட்டமிட்டனர். அதற்காக, படவிழாவில் வழங்கப்படும் ஒரு விருதுக்கு அம்மா அவார்ட் என்று பெயர் வைத்தனர். அப்படியும் அவர்களுக்கு தமிழக அரசின் 50 லட்சம் நிதி உதவி கிடைக்கவில்லை.
தமிழ அரசின் நிதி உதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திரைப்படவிழாவின் விளம்பரங்களில் எல்லாம் தமிழக அரசின் சப்போர்ட் உடன் என்று அரசு முத்திரையையும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழக அரசிடமிருந்து பண உதவி கிடைக்க காரணமானவர்களில் ஒருவரான சுஹாசினி போன்றவர்கள் இம்முறை விலகிக்கொண்டுவிட்டனர். எனவே வேறு சிலர் மூலம் போயஸ்கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவிடம் திரைப்பட விழாவுக்கு நிதி உதவி கேட்டு இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர். மனுவை அங்குள்ள அதிகாரிகள் பெற்றுக்கொண்டதோடு சரி...நிதி உதவி கிடைக்கவில்லை.
தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் கிடைக்கும், அதை வைத்து செலவு செய்யலாம் என்று கனவில் இருந்தவர்களுக்கு செம அதிர்ச்சி. இந்நிலையில் த்ரிஷாவின் காதலரும் பட அதிபருமான வருண் மணியன் பெரும் தொகையை கொடுத்திருக்கிறாராம். எனவே திரைப்பட விழாவின் துவக்கநாள் நிகழ்ச்சியில் அவருக்கு முதல்மரியாதை தரப்பட்டிருக்கிறது.