‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழில், 'வால்மீகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா நந்தன். அதன் பிறகு அய்யனார், சூரிய நகரம் படங்களில் நடித்தார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது தமிழில் சரத்குமாருடன் சண்டமாருதம் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் காற்றும் மழையும், என்னு சுவந்தம், கசின்ஸ் படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் துபாயில் ஒலிபரப்பாகும் ஒரு வர்த்தக வானொலியில் சிறப்பு ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றி வருகிறார். சண்டமாருதம் படத்தில் நடிக்க வரும்போது அந்த வானொலி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதியும், விடுமுறையும் பெற்று வந்து பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.
குறுகியகால விடுமுறையில் வந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இரவு பகலாக படமாக்கினர். கடைசியாக எடுப்பதாக இருந்த கிளைமாக்ஸ் காட்சிகளை மீரா நந்தனுக்காக முன்பே எடுத்து முடித்திருக்கிறார்கள். மீரா நந்தனுக்காக சரத்குமார் 36 மணி நேரம் தொடர்ந்து நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் மீரா நந்தனை பாராட்டி மலர்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர்.