தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில வருடங்களுக்கு முன் வரை தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயரெடுத்தவர் அஞ்சலி. “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு” என அவருடைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றதுமில்லாமல், அவரை ஒரு சிறந்த நடிகையாகவும் அடையாளம் காட்டியது. இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் அடுத்த ரேவதி இவர்தான் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் திடீரென தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கினார். அவருடைய தனிப்பட்ட குடும்ப விவகாரத்தால் தமிழ்நாட்டிற்கு வருவதையே விட்டுவிட்டு, ஆந்திரா பக்கமே தங்கிவிட்டார். அங்கு அவருக்கு தெலுங்குப் படங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
இருந்தாலும் அஞ்சலியை மறக்காத தமிழ்த் திரையுலகம் அவருக்கு மீண்டும் ஒரு இன்னிங்ஸைக் கொடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது விமல் ஜோடியாக மாப்பிள்ளை சிங்கம் என்ற புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர்களிருவரும் தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் இது. பழையபடியே அஞ்சலி மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம். பிரச்சனைக்குரிய இயக்குனருடன் ஒருவர் சமரசம் பேசிவிட்டதாகவும், அதனால்தான் அஞ்சலி மீண்டும் பழையபடி தமிழ்த் திரையுலகில் வலம் வர ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.