தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கல்லுக்குள் ஈரம் படம் தொடங்கி, ரெட்டச்சுழி, பாண்டியநாடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. கல்லுக்குள் ஈரம் வெற்றியடைந்தால் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும், அப்படம் படு தோல்வியடைந்த காரணத்தால் நடிக்கும் ஆசையை கைகழுவியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறி இருகிகிறார். அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு ஷங்கரின் தயாரிப்பில் நடித்த, ரெட்டச்சுழி படமும் தோல்வியடைந்தநிலையில் இனி கேமராவுக்கு முகத்தைக் காட்டவே வேண்டாம் என நினைத்திருந்தார் பாரதிராஜா.
பாண்டியநாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடிக்க பெரும் சம்பளத்தைக் கொடுத்து அவரது பிடிவாதத்தை தளர்த்தி அப்பா கேரக்டரில் நடிக்க வைத்தனர். அப்படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதைவிட பாண்டியநாடு படமும் வெற்றிபெற்றது. தன் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டு பாரதிராஜாவை அடுத்த கட்டத்துக்கு அதாவது ஹீரோவாக நடிக்க தூண்டி உள்ளது.
ஓம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா. சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் ஓம் படத்தை இயக்குகிறார். சலீம் வெற்றியைத் தொடர்ந்து பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்திருக்கிறது. பெரிய சம்பளமும் தருவதாக கூறி இருந்தனர். இவர் பாரதிராஜாவின் டிவி சீரியலில் உதவியாளராக இருந்தவர். எனவே நிர்மல்குமாரை அழைத்து தான் ஹீரோவாக நடிக்கும் ஓம் படத்தை இயக்கும்படி கூறி இருக்கிறார் பாரதிராஜா. குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் ஓம் படத்தை இயக்குகிறார் நிர்மல்குமார்.
என்னே...ஒரு குரு பக்தி!