ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பலபேரை கூட்டணி சேர்த்துக் கொண்டு படம் தயாரிப்பது இப்போது (க்ரவுட் பண்ட்) பேஷனாகி வருகிறது. தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் சுமார் 60 பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு முயல் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். அதேபோன்று தற்போது டிஸ்கவரி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டி உச்சிமாகாளி என்ற படத்தை தயாரிக்கிறது. 100 பேர்களிடம் பணம் திரட்டி படத்தை தயாரிக்கிறார்கள். விரும்பம் உள்ளவர்கள் தயாரிப்பாளராகலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஏக்நாத் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அவரும், அறிவுமதியும் பாடல்களை எழுதுகிறார்கள். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கவுசிக் இசை அமைக்கிறார். மு.வேடியப்பன் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டரை ரீமேக், தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. திருநெல்வேலி பகுதியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.