'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திமுக., கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பூ, அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூ தான். அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்ளுடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், பின்னர் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார், இதுதவிர டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு திமுக கட்சியில் இணைவதாக அறிவித்தார் நடிகை குஷ்பூ. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், 2014ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் திமுக.வுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதனைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விட்டு விலகிய குஷ்பூ, ஜூன் 16ம் தேதி, திமுக., கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும் நான் எந்தகட்சியிலும் சேரப்போவதில்லை என்று அப்போது கூறினார்.
இந்நிலையில் திமுக.வை விட்டு விலகிய குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணை தலைவர் ராகுலையும் இன்று மாலை 5 மணியளவில் டில்லியில் சந்தித்து பேசி, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் உடனிருந்தார்.
இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, நாட்டு நலனுக்காக பாடுபடுவேன். தமிழகம் இந்தியாவில் தான் உள்ளது. எனவே தமிழகத்தை மட்டும் தனித்து பார்க்க முடியாது.நாட்டுந லன் கருதியே காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி காங்கிரஸ். மதசார்பற்ற கட்சி காங்கிரஸ். நாட்டை ஒற்றுமையாக காங்கிரஸ் கட்சி தான் வைத்திருக்கும் என கூறினார்.