பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவா. தமிழ் தவிர நிறைய தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராஜேசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில், சேகர் ரெட்டி என்பவருக்கு ஜீவிதா ரூ.22 லட்சத்துக்காக செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை, சேகர் ரெட்டி வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது. மேலும் அதற்குரிய மாற்று செக்கையோ அல்லது பணத்தையோ ஜீவிதா கொடுக்கவில்லை. இதனையடுத்து சேகர் ரெட்டி, ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ஜீவிதாவுக்கு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் ஜீவிதா அதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீவிதாவுக்கு ஜாமினில் வெளிவராத முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் அளித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பளித்த ஐதராபாத் கோர்ட், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.