தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. நடிகர் சங்க பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நாடக நடிகர்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாக்கி உள்ளதும், புதிய கட்டிடம் கட்ட விடுக்கப்பட்ட டெண்டரில் நடந்த முறைகேடுகளும், தொடர்ந்து ஒரு சிலரின் கைகளிலேயே நடிகர் சங்கம் சிக்கி இருப்பதும் இன்றைய இளம் நடிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் நடிகர் விஷால் தலைமையில் கடந்த ஒரு வருடமாகவே ஒன்றிணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடக நடிகர்களின் ஆதரவை திரட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் சென்ற இடத்தில் இளம் நடிகர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க விஷயம் பூதகாரமாக வெடித்திருக்கிறது.
வருகிற 30ந் தேதி கூட இருக்கும் நடிகர் சங்க செயற்குழுவில் விஷாலை சங்கத்தை விட்டு நீக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஷால் தனக்கு ஆதரவாக இளம் நடிகர்களை திரட்டி வருகிறார். ரஜினி, அஜீத் தவிர மற்ற முன்னணி நடிகர்களை சந்தித்து பேசி அவர்களின் ஆதரவை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் விஷால் அறிவித்திருக்கிறார்.
"நடிகர் சங்க தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் நான் போட்டியிடுவேன். தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். அதற்கு என்னை விட பொருத்தமான ஒருவரை நிறுத்துவோம். நான் வேறொரு பொறுப்புக்கு போட்டியிடுவேன். தேர்தல் நேரத்தில் இதுபற்றி முறைப்படி அறிவிப்போம். தேர்தலில் வெற்றி தோல்வியை பற்றி கவலையில்லை. நடிகர்களின் சுயமரியாதையை காப்பாற்றவே போட்டியிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.