ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கடல்' படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாம். 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே அவர் படப்பிடிப்பை நீண்ட நாட்களாக நடத்துவார். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அவர் மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் என்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல், மிகப் பொருட் செலவில் படத்தைத் தயாரிக்காமல் படத்தை மிகவும் எளிமையாகவே உருவாக்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். தற்போது படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது என படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். படத்திற்கு 'ஓகே கண்மணி' என்று பெயரிட்டுள்ளதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பி.சி.ஸ்ரீராம் படத்தின் படப்பிடிப்பைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதில் 'வாழ்க வளமுடன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.