'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அப்படத்தின் இயக்குனர் செளந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.
கோவா கலா அகாடமியில், கோச்சடையான் படம் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக விழா நிர்வாகிகளால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. பின் படம் திரையிடும் அரங்கம் குறித்த அறிவிப்பில், ரஜினி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த பணி காரணமாக, ரஜினி பெங்களூருவிற்கு சென்று இருப்பதால், அவரால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் செளந்தர்யா பேசியதாவது, கோச்சடையான் எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படம். முதல் படமே, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. போட்டோ- ரியலிஸ்டிக் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்டிருக்கும் முதல்படம் இது என்றும், மற்றும் இந்த தொழில்நுட்பத்தை, தான் அறிமுகப்படுத்த வாய்ப்பு அளித்த ரஜினிக்கு, இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக செளந்தர்யா கூறினார்.