துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது கரையோரம், நகுலுடன் நாரதன், விஜய் வசந்துடன் சகிண்டி, தெலுங்கில் ரம்பா ஊர்வசி மேனகை படங்களில் நடித்து வருகிறார்.
நிகிஷா நடிக்கும் கரையோரம் ஒரு திகில் படம். இதன் படப்பிடிப்புகள் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. கடற்கரையில் குதிரையில் ஜாலியாக வரும்போது வில்லன்கள் அவரை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டியது உள்ளது. இதனால் மற்ற காட்சிகளில் நடித்துவிட்டு மீதியுள்ள நேரத்தில் நிகிஷா குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சி முடிந்ததும் அவர் சண்டைக் காட்சியில் நடிக்கிறார்.
தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தை கன்னட இயக்குனர் ஜேகேஎஸ் இயக்குகிறார். கன்னட ஹீரோ வசிஷ்டா, சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இனியா வில்லியாக நடிக்கிறார். படத்தில் 3 பாடல் காட்சிகள் இடம்பெறுகிறது. அதில் ஒன்றை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டடிருக்கிறார்கள்.