தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயகாந்துக்கு ஜோடியாக கஜேந்திரா, பிரபு-கார்த்திக் நடித்த குஸ்தி படங்களில் நடித்த ப்ளோராவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாதபோதும், அவ்வப்போது ஏதோ ஒரு படத்தில் தலைகாட்டியபடி நானும் சினிமாவில் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபகாலமாக அவருக்கான கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து விட்டதால் குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.
தற்போது தமிழில் டைரக்டர் செந்தில்நாதன் இயக்கும் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கும் புளோரா, ஏற்கனவே ஒரு கன்னட படத்திலும் குத்தாட்டம் போட்டுள்ளாராம். ஆனால், அப்படி தான் படப்பிடிப்புக்கு மும்பையில் இருந்து வரும்போது தன்னுடன் அம்மா அல்லது உதவியாளர்கள் யாரையும் அவர் அழைத்து வருவதில்லையாம்.
மாறாக, தனது பாய் ப்ரண்டுடன்தான் வந்து இறங்குகிறாராம். அவரை தனி அறையில் தங்க வைக்காமல் தனது அறையிலேயே தங்க வைத்துக்கொள்ளும் புளோரா, படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால், 11 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கே வருகிறாராம். அதுவும் உதவி இயக்குனர்கள் சென்று 9 மணிக்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கதவை தட்டி எழுப்பிய பிறகுதான் குளித்து விட்டு மெல்லமாக ஸ்பாட்டுக்கு வருகிறாராம்.
அதுமட்டுமின்றி, தனக்கான படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த ஹோட்டல் அறையை காலி பண்ணாமல் எக்ஸ்ட்ராவாக சில நாட்களுக்கு அதே அறையில் பாய்பிரண்டுடன் டேரா போட்டு விட்டு, அந்த செலவையும் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டுகிறாராம் புளோரா. அவரது இந்த செயலால் தயாரிப்பாளர்கள் செம டென்சனில் இருக்கிறார்கள்.