இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர்.
எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட தொண்டர்கள் வேண்டும் என்றால் விஷாலை அணுகினால், அவர்கள் கேட்கும் ஆட்களை ஆயிரம் முதல் லட்சம் வரை அனுப்பி வைக்கிற புரோக்கர். பஸ் லாரி வாடகை வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர் என எல்லாவற்றுக்கு பில்போட்டு வசூலித்துவிடுவாராம். கோஷம்போட எவ்வளவு, ஆர்ப்பாட்டம் பண்ண எவ்வளவு, மறியல் பண்ண எவ்வளவு, தடியடியில் காயம் பட்டால் எவ்வளவு, ஜெயிலுக்கு போனால் எவ்வளவு என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வைத்திருப்பாராம். படம் முழுக்க அரசியல் பன்ஞ்சும் இருக்கிறதாம்.