ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா பாசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் அவரை 6 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்து கவுன்சிலிங்கும், கைத் தொழில் பயிற்சியும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்வேதா பாசு ஐதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதாவை மகளிர் காப்பகத்தில் அடைத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்று அவரது தாயார் கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை கோர்ட் தள்ளுபடி செய்தது. அதனால் அவரது தாயார் செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த செசன்ஸ் கோர்ட் மகளிர் காப்பகத்திடம் கருத்து கேட்டது. ஸ்வேதா தற்போது நல்ல பக்குவம் அடைந்திருப்பதாகவும், அவரை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் காப்பகம் கூறியது. இதையடுத்து ஸ்வேதாவை விடுவிக்க அனுமதியளித்தது நீதிமன்றம்.
இதையடுத்து ஸ்வேதா விரைவில் காப்பகத்திலிருந்து வெளிவருவார் என்று தெரிகிறது. தன்னை விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோருடன் ஸ்வேதா வாழ விரும்பவில்லை என்றும், தனித்து வாழவே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஸ்வேதாவுக்கு சினிமா வாய்ப்பு வழங்க பலர் முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.