தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1990ல் மலைச்சாரல் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தங்கர்பச்சான். அதையடுத்து தர்மசீலன், மோகமுள், வான்மதி, காதல் கோட்டை என பல படங்களில் பணியாற்றிய அவர், 2002ல் அழகி படம மூலம் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதன்பிறகு சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கினார்.
ஆனால், பிரபுதேவா-பூமிகாவை வைத்து அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், விரைவில் அப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒளிப்பதிவாளராக களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.
மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற முக்கிய வேடத்தில் நடித்திருந்த கலையரசன் கதாநாயகனாக நடிக்கும் மைலாஞ்சி என்ற படத்திற்குதான் தற்போது அவர் ஒளிப்பதிவு செய்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்வதில் சிறந்தவர் என்பதால். அவரது தொழில்நுட்பம் பற்றி அறிந்த சில இயக்குனர்கள் அடுத்தடுத்து அவருக்கு சான்ஸ் கொடுக்க தயாராகி வருகிறார்கள். அதனால் நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஒளிப்பதிவாளராக மீண்டும் பிசியாகிறார் தங்கர்பச்சான்.