தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கத்தி பட வெளியீட்டிற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்களுக்கும், காமெடி நடிகரான பிரேம்ஜி அமரனுக்கும் இடையே டுவிட்டர் வலைத்தளத்தில் கடுமையான வாக்குவாதம் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இந்த சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் கலெக்ஷனைப் பற்றி வெளியிட்ட அறிவிப்பைப் தொடர்ந்து சிலர் கத்திடீம்வடை என ஹேஷ் டேக்குடன்அந்த கலெக்ஷனைப் பற்றி கிண்டலடித்து வந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரேம்ஜி அமரனும் பல கமெண்ட்டுகளைப் போட்டுவந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்றும் இன்றைய ஸ்பெஷல் வட கறி என ஒரு பதிவைப் போட்டார். அதோடு கத்தி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஒரு வீடியோ பதிவையும் போட்டு அதைப் பாராட்டுவது போல் கிண்டலான வார்த்தைகளுடன் சேர்த்து ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் அவரைக் கண்டபடி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தனர். சிலர் கெட்டக் கெட்ட வார்த்தைகளில் கூட அவரைத் திட்ட ஆரம்பித்தனர். நேற்று ரஜினிகாந்த்தான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் பதிவைப் போட்டு விஜய் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றினார். கத்தி பட கலெக்ஷனையடுத்து விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு சில தினங்களாக மீண்டும் எழுந்து வருகிறது. தேவையே இல்லாமல் ஒரு சராசரி ரசிகரைப் போல் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் பிரேம்ஜி அமரனின் இந்த செயல் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டே கல் எறிந்து வரும் பிரேம்ஜி அமரனின் இந்த செயல் இன்னும் திரையுலகத்தினர் கண்டு கொள்ளாதததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது.