தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் ஒரு மேன்லியான பெண்ணாக நடித்திருந்த அஞ்சலி, ஜெய்யின் கெமிஸ்ட்ரியும் அப்போது பேசப்படுவதாக இருந்தது. படமும் ஹிட்டடித்ததால் அடுத்து அந்த ஜோடி பல படங்களில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதையடுத்து சில படங்களிலேயே, அஞ்சலி ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் அது நடக்கவில்லை. அதனால் , 8 வருடங்களுக்கு முன்பு சுப்ரமணியபுரம் படத்தில் தன்னுடன் நடித்த ஸ்வாதி போன்ற நடிகைகளுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் ஜெய். இந்த நிலையில் தற்போது அதே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் வலியவன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெய். இந்த படத்தில் அஞ்சலிதான் நடிக்க வேண்டியதாம்.
ஆனால், அவர் அந்த சமயத்தில் தமிழ் சினிமாவே வேண்டாம் என்பது போல் சொல்லிக்கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பு ஆண்டரியாவுக்கு கிடைத்தது. இருப்பினும் ஜெயம்ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கும் அஞ்சலி, தனது முன்னாள் ஹீரோக்களான ஆர்யா, ஜெய் போன்றவர்களுடன் மீண்டும் நடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளார். அதோடு சில முன்னணி இயக்குனர்களிடமும் சான்ஸ் கேட்டு வரும் அஞ்சலி, ஓரளவு பிரபலமான ஹீரோக்களுடன் மட்டுமே தான் அடுத்தடுத்து நடிக்கும் ஆர்வத்தில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.